மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலி - மற்றொருவர் படுகாயம்


மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலி - மற்றொருவர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர்

சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மௌலி (வயது 23). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் அஜய் (24) என்பவரை அழைத்துக் கொண்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

வழியில் ஜனப்பன்சத்திரம்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் தானாகுளம் என்ற பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில் மெளலி மற்றும் அஜய் இருவரும் கீழே விழுந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 2 போரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாடியநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மௌலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அஜய்க்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story