ஆலய நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை


ஆலய நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Dec 2022 9:17 PM GMT (Updated: 22 Dec 2022 10:27 AM GMT)

ஆலய நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

களியக்காவிளை:

குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவர் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இவருடைய மகன் ஒரு வழக்கில் சிக்கி தற்போது ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் அவருக்கு கடன் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜேந்திரன் சம்பவத்தன்று இரவு தூங்க சென்றார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு விஷம் குடித்து இறந்தநிலையில் ராஜேந்திரன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story