சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்


சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்
x

திருமருகலில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என மாதர் சங்கம்-இளைஞர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என மாதர் சங்கம்-இளைஞர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரவை கூட்டம்

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாதர் சங்கம் ஒன்றிய தலைவர் வாசுகி, இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் பழனிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா, மாவட்ட பொருளாளர் சரோஜா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பரிதா வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைேவற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சார்பதிவாளர் அலுவலகம்

திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த வேண்டும். 54 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய திருமருகலில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும், 100 நாள் வேலை தொடங்கும் நேரம் காலை 7 மணி என்பதை காலை10 மணி என மாற்றி அமைக்க வேண்டும்.படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு மாத உதவி தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story