விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு


விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடுபோனது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரை சேர்ந்தவர் முருகன் மனைவி வள்ளி (வயது 57). நேற்று முன்தினம் இரவு இவரும், அவரது மகள் விசாலாட்சியும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 2 பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து வள்ளி, கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story