மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியை தாண்டியது.!


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியை தாண்டியது.!
x
தினத்தந்தி 28 July 2023 11:15 AM GMT (Updated: 28 July 2023 11:15 AM GMT)

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம்,

கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,444 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 15 ஆயிரம் கன அடியை தாண்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து மாலை 4 மணியளவில் விநாடிக்கு 15,232 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.


Next Story