காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு தகவல்


காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் -  தமிழ்நாடு அரசு தகவல்
x

செப்டம்பர் மாதத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் மாதத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில் , ஜனவரி மாதம் 5 மாவட்டங்களில் மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில், மே மாதம் முதல் மேலும் 5 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திட்டம் அமல்படுத்தப்படுவது தொடா்பான அறிக்கையை ஏப்ரல்.4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு சென்னை ஐகோர்ட்டு வழக்கை ஒத்திவைத்தது .


Next Story