வெண்டைக்காய் விளைச்சல் அமோகம்; விலை குறைவு


வெண்டைக்காய் விளைச்சல் அமோகம்; விலை குறைவு
x

வெம்பக்கோட்டை பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தாலும் விலை குறைந்து காணப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தாலும் விலை குறைந்து காணப்பட்டது.

வெண்டைக்காய் சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியம் அம்மாபட்டி, செவல்பட்டி, எட்டக்காபட்டி, அலமேலுமங்கைபுரம், தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

3 மாத பயிரான வெண்டைக்காய் தற்போது மழை இல்லாததால் கிணற்று பாசனம் மூலம் பயிர் செய்யப்பட்டு உள்ளது. எதிர்பார்த்ததை விட வெண்டைக்காய் மகசூல் நன்றாக இருந்தது. விளைச்சல் அமோகமாக இருந்ததால் விலையும் கூடுதலாக கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

கிலோ ரூ.15

ஆனால் வரத்து அதிகம் காரணமாக வெண்டைக்காய் விலையை வியாபாரிகள் குறைத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து எட்டக்காபட்டி விவசாயி திருமால் கூறியதாவது:-

கிணற்று பாசனத்தில் குறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூலை தரக்கூடிய வெண்டைக்காய் இப்பகுதியில் அதிகம் பயிரிட்டுள்ளனர். எதிர்பார்த்ததை விட விளைச்சல் நன்கு இருந்தது. சென்ற மாதம் வரை வெண்டைக்காய் 1 கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையானது. ஆனால் தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

விவசாயிகள் கவலை

போதிய விளைச்சல் இருந்தும், விலை இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தக்காளிக்கு கிடைத்தது போன்று விலை கிடைக்காவிட்டாலும் வழக்கமான விலை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது விற்பனையாகும் விலையை வைத்து வெண்டைக்காய் பறிக்கும் தொழிலாளர்களுக்கு தான் கூலி கொடுக்க முடியும். போதிய விலை இல்லாததால் வெண்டைக்காய் அறுவடை செய்வதை தற்காலிகமாக விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story