ஆசிரியை வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு


ஆசிரியை வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு
x

ஆசிரியை வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு

தஞ்சாவூர்

தஞ்சையில் ஆசிரியை வீட்டில் 5½ பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசிரியை வீட்டில் திருட்டு

தஞ்சை மானோஜிப்பட்டி சோழன்நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஞானராஜ். இவருடைய மனைவி பிரீத்தி வினோலியா சுதா (வயது 51). இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். மாலையில் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள், பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

பின்னர் இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோ, சுவர்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story