திருக்குறள் முற்றோதல் போட்டி


திருக்குறள் முற்றோதல் போட்டி
x

திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. திருக்குறள் முற்றோதலில் கலந்துகொள்ளும் மாணவர்கள், திறனறிவு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். 2022-23-ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamillvalarchlthurai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ஏ பிளாக் கட்டிட, 4-வது தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0416- 2256166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்பவர்கள் அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளை கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். ராணிப்பேட்டை வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்க படும் இப்பரிசினை இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story