தமிழகத்தில் மேலும் 892 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 892 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 892- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 532 ஆண்கள், 360 பெண்கள் என மொத்தம் 892 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 178 பேர், கோவையில் 101 பேர், செங்கல்பட்டில் 69 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் இல்லை.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி 8 ஆயிரத்து 288 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 73 பேரும், கோவையில் 795 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story