சுற்றுலா பயணிகளிடம் ரூ.10 ஆயிரம், 4 செல்போன்கள் திருட்டு


சுற்றுலா பயணிகளிடம்   ரூ.10 ஆயிரம்,  4 செல்போன்கள் திருட்டு
x

சுற்றுலா பயணிகளிடம் ரூ.10 ஆயிரம், 4 செல்போன்கள் திருட்டு

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாகவும், குமரியின் குற்றாலம் எனவும் திற்பரப்பு அருவி அழைக்கப்பட்டு வருகிறது. இதனால், தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருதை தந்து அருவில் ஆர்வத்துடன் குளித்து விட்டு செல்கிறார்கள். நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் சிலர் ஒரு காரில் திற்பரப்புக்கு வந்தனர். அவர்கள் தங்களது பொருட்களை காரில் வைத்து விட்டு அருவில் குளிக்கச் சென்றனர். அருவியில் குளித்து விட்டு அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, காரில் வைத்திருந்த 4 விலை உயர்ந்த செல்போன், ரூ.10 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம நபர்கள் பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் குலசேகரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கடந்த 6 மாதங்களில் 4 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story