கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 18 Jun 2023 7:30 PM GMT (Updated: 18 Jun 2023 7:30 PM GMT)

வாரவிடுமுறை தினத்தையொட்டி நேற்று, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

திண்டுக்கல்

.குவிந்த சுற்றுலாப் பயணிகள்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வாரவிடுமுறை தினத்தைெயாட்டி, நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதன் காரணமாகவும், வாரச்சந்தை நடைபெற்றதாலும் நகரில் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.

சாரல் மழை

சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டம் நிலவிய நிலையில் பிற்பகல் 3 மணி முதல் சுமார் 15 நிமிடங்கள் பல்வேறு இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. சுற்றுலா பயணிகள் அதில் நனைந்தபடி நடந்து சென்று உற்சாகம் அடைந்தனர். சாரல் மழை மாலை வரை நீடித்தது.

வனப்பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களில் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். அவர்கள் பிரசித்தி பெற்ற நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்தனர்.

மேலும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரியில் ஈடுபட்டனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர். சீசன் முடிவு அடைந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் சுற்றுலா தொழில் நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story