செங்கொடி உருவப்படத்துக்கு மரியாதை


செங்கொடி உருவப்படத்துக்கு மரியாதை
x

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செங்கொடி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி, காஞ்சீபுரம் மக்கள் மன்ற போராளி செங்கொடி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி தீக்குளித்து வீரமரணம் அடைந்தார்.

அவரது 11-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாளையங்கோட்டை தென் தலைமை அலுவலகத்தில் செங்கொடி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அந்த படத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் நெல்லையப்பன், தலைமை நிலைய செயலாளர் கல்குறிச்சி சேகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கிங் தேவேந்திரன், மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் முருகன், மகளிர் அணி செயலாளர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story