வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிப்பு
ஓட்டப்பிடாரம் அருகே வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் திருமணி ஸ்டாலின், பஞ்சாயத்து தலைவர்கள் பிரேமா, லதா, வருவாய் ஆய்வாளர் செல்வரேகா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜன், செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story