விழுப்புரம்: விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ்


விழுப்புரம்: விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ்
x

விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்தத்தில் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு முதல் அமைச்சர் நிதி உதவி அளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் ஏற்கெனவே சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 9 பேர் டிஸ்சார்ஞ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது மருத்துவமனையில் 19 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


Next Story