முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x

திண்டுக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விசாகன் வழங்கினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர். அப்போது திண்டுக்கல்லில் போர் நினைவு சின்னம் அமைத்தல், கொடைக்கானலில் முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி கட்டுதல், இலவச வீட்டுமனை பட்டா, கடன்உதவி, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 25 பேர் மனு கொடுத்தனர்.

இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி தாமதம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் 2 பேருக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை, 4 பேருக்கு வங்கி கடன் வட்டி மானியம் என மொத்தம் ரூ.86 ஆயிரத்து 835 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை துணை இயக்குனர் சுரேஷ்குமார், திண்டுக்கல் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் சுகுனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story