விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சசிகலா சாட்சியம் அளிக்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி


விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சசிகலா சாட்சியம் அளிக்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
x

விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சசிகலா சாட்சியம் அளிக்காதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் கொட்டி கிடக்கிறது. அந்த பணத்தை வைத்து ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். எத்தனை ஆட்களை பிடித்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றுமே செய்ய முடியாது.

ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு அ.தி.மு.க.வில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அ.தி.மு.க.வுக்கு எப்போதுமே பின்னடைவு கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் மேற்கொள்வது புரட்சி அல்ல மிரட்சி பயணம்.

ஓ.பன்னீர்செல்வம் மகா நடிகன்

ஓ.பன்னீர்செல்வம் உத்தமன் போல பேசும் மகா நடிகன். அவர் நடிகனாக இருந்திருந்தால் சிவாஜிகணேசன், ரஜினிகாந்தை தோற்கடித்து 'ஆஸ்கார்' விருதை பெற்று இருப்பார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட அ.தி.மு.க. வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணத்தில்தான் அவரது செயல்பாடு இருந்தது. அ.தி.மு.க. என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, எம்.எல்.ஏ.க்களை நம்பியோ, எம்.பி.க்களை நம்பியோ தொடங்கப்படவில்லை. தொண்டர்களை நம்பித்தான் எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வில் என்றுமே இடம் கிடையாது. அதேபோல சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கும் இடம் கிடையாது. அதாவது கறந்த பால் மடி புகாது. கருவாடு மீன் ஆகாது.

ஜெயலலிதா மரண அறிக்கை

ஜெயலலிதா மரண அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை தி.மு.க. அரசுக்கு உண்டு.

ஜெயலலிதா மரணம் குறித்து தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவித்து வரும் சசிகலா விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்காதது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story