நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு; பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்பு


நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை:  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து   தொடர்ந்து அதிகரிப்பு;  பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்பு
x

நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன். இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது.இதேபோல் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்படும் உபரி நீரின் அளவும் வினாடிக்கு 5100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story