பெண்-சகோதரர் மீது தாக்குதல்


பெண்-சகோதரர் மீது தாக்குதல்
x

மணல்மேடு அருகே குடும்ப பிரச்சினையில் பெண்-சகோதரர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

மணல்மேடு;

மணல்மேடு அருகே உள்ள கல்யாணசோழபுரம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி மணிமேகலை. கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணிமேகலையின் அண்ணன் வீரசோழன் இது குறித்து செல்வகுமார் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டாா். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் மற்றும் அவரது சகோதரர் ஒன்று சேர்ந்து வீரசோழனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த மணிமேகலையும் தாக்கப்பட்டார். இதுகுறித்து மணிமேகலை அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story