ஆட்டோ மோதி தொழிலாளி சாவு


ஆட்டோ மோதி தொழிலாளி சாவு
x

காவேரிப்பட்டணத்தில் ஆட்டோ மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் ஏ.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் காவேரிப்பட்டணம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாராம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story