எல்லாபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சாவு


எல்லாபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சாவு
x

எல்லாபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

எல்லாபுரம் ஒன்றியம், காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 62). கூலி தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாத கூறப்படுகிறது. இதற்கு அவர் சிசிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த கஜேந்திரன் பூச்சி மருந்தை வாங்கி (விஷம்) குடித்தார். சிறிது நேரத்தில் வலியால் அலறி துடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் கஜேந்திரனின் மகன் குணசேகரன் நேற்று புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 54). இவர் திருத்தணி நகராட்சியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் நகராட்சியில் வேலைக்கு வந்த கழிவறைக்கு சென்ற நிலையில் திடீரேன அங்கே மயங்கி விழுந்தார். அவரை சக ஊரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story