தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சேலம் நெத்திமேடு புத்தூர் இட்டேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 27), மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி. இவர் ரஞ்சிதா (28) என்பவருடன் கொடம்பக்காடு பகுதியில் குடும்பம் நடத்தி வந்தார். கனகராஜ், ரஞ்சிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கனகராஜ் நள்ளிரவில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கனகராஜ் மீது, ஏற்காட்டில் கடந்த 2015-ம் ஆண்டில் சொத்து பிரச்சினையில் நடந்த இரட்டை கொலை வழக்கு உள்ளதும், இந்த வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Next Story