விஷம் குடித்து இளம் பெண் சாவு


விஷம் குடித்து இளம் பெண் சாவு
x

விஷம் குடித்து இளம் பெண் சாவு

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள குடிகாடு நடுத்தெருவில் வசிப்பவர் முருகராஜ்(வயது52). விவசாயி. இவரது மகள் பவ்யா(24). பட்டதாரியான இவர் நீண்டநாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த பவ்யா வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) கடந்த 19-ந்தேதி குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பவ்யாவை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story