இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது


இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
x

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

மதுரை


மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார். அவருக்கு திருமண ஆசை காட்டி கொடைக்கானல் அறையில் தங்கியும் மற்றும் பழங்காநத்தம் பகுதியிலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story