இளைஞர் திறன் திருவிழா


இளைஞர் திறன் திருவிழா
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)

படித்த, வேலைவாய்ப்பற்றோருக்கான இளைஞர் திறன் திருவிழா கல்வராயன்மலையில் நாளை மறுநாள் நடக்கிறது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களை பற்றி அறிந்து கொள்வதோடு திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெறும் வகையில் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கல்வராயன்மலை தாலுகா வெள்ளிமலை ஊராட்சியில் இன்டேக்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்புக்கு மேல் கல்வி தகுதியுடைய 35 வயதுக்குட்பட்ட அனைத்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமுள்ள திறன்பயிற்சியை தேர்வு செய்து பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம். பயிற்சிக்கு பிந்தைய வேலைவாய்ப்பை பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும். மேலும் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவும் வகையில் அரசு திட்டங்கள் பற்றிய விவரங்களை இம்முகாமில் அறிந்து கொள்ளலாம். தகுதியான அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வி தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story