விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

ஒரத்தநாடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வாசல் உடையார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜதுரை (வயது21). இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ராஜதுரை பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரை குடும்பத்தினர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜதுரை பரிதாபமாக இருந்தார். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரை தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story