ஈரானில் புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு


ஈரானில் புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 1:53 AM GMT (Updated: 11 Nov 2019 1:53 AM GMT)

ஈரானில் 5,300 பேரல்கள் வரை தரக்கூடிய புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெஹ்ரான்,

ஈரான் உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 4 வது இடத்திலும், எரிவாயு ஏற்றுமதியில் 2 வது இடத்திலும் உள்ளது.

ஈரான் அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்வதாக கூறி அந்நாட்டுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. 

மேலும் அமெரிக்க அரசாங்கம் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது.

இது பொருளாதார ரீதியாக ஈரானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஈரானில் புதிதாக மிகப்பெரிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று அறிவித்துள்ளார். 

சுமார் 5,300 கோடி பேரல் கச்சா எண்ணெய் தரும் இந்த புதிய எண்ணெய் கிணறு, ஈரானின் தென்மேற்கு பிராந்தியமான குசெஸ்தானில் அமைந்துள்ளது.

Next Story