வருமானம் அதிகரித்தால் மக்கள் விலை உயர்வையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் - பாஜக மந்திரி பேச்சு


வருமானம் அதிகரித்தால் மக்கள் விலை உயர்வையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் - பாஜக மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 1 Nov 2021 9:09 AM GMT (Updated: 1 Nov 2021 9:09 AM GMT)

வருமானம் அதிகரித்தால் மக்கள் விலை உயர்வையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக மந்திரி தெரிவித்துள்ளது.

போபால்,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில், மத்தியபிரதேச மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான மகேந்திரசிங் சிசோடியா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, பெட்ரோல், டீசல் விலை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மகேந்திரசிங் சிசோடியா, நமது வருமானம் அதிகரிக்கும்போது நாம் விலை உயர்வையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு நடைமுறை செயல்தான்’ என்றார்.

Next Story