இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறை


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறை
x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு,

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்தது. அதோடு அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

இதையடுத்து அந்த மீனவர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் வரும் செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Next Story