ஜாலியன் வாலாபாக் படுகொலை : இங்கிலாந்து மன்னிப்பு கேட்க பாகிஸ்தான் வலியுறுத்தல்


ஜாலியன் வாலாபாக் படுகொலை : இங்கிலாந்து மன்னிப்பு கேட்க பாகிஸ்தான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 April 2019 11:45 PM GMT (Updated: 11 April 2019 6:49 PM GMT)

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத், 

தெரசா மே, மன்னிப்பு கேட்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானும் இதை வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தகவல்துறை மந்திரி பவத் சவுத்ரி கூறியதாவது:–

பாகிஸ்தான், இந்தியா, வங்காள தேசம் ஆகிய நாடுகளிடம் இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறோம். மேலும், லாகூர் அருங்காட்சியகத்துக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை அருங்காட்சியகத்துக்கே இங்கிலாந்து அரசு திருப்பித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story