வான் பரப்பில் பறந்த ரஷ்ய போர் விமானங்கள் 360 முறை சுட்டு தென்கொரியா எச்சரிக்கை


வான் பரப்பில் பறந்த ரஷ்ய போர் விமானங்கள் 360 முறை சுட்டு தென்கொரியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 July 2019 9:48 AM GMT (Updated: 23 July 2019 10:37 AM GMT)

தென்கொரிய வான் பரப்பில் பறந்த ரஷ்ய போர் விமானங்களை மறித்து 360 முறை துப்பாக்கியால் சுட்டு தென்கொரிய விமானப்படை விமானங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான குண்டு வீசும் 2 போர் விமானங்கள் முதலில் 2 சீன போர் விமானங்களுடன் தென்கொரிய எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து டோக்டோ எனும் பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் 2 முறை அத்துமீறியதாகவும் உடனடியாக புறப்பட்டுச் சென்ற தென்கொரிய போர் விமானங்கள் சுமார் 360 முறை துப்பாக்கியால் சுட்டு ரஷ்ய போர்  விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தென்கொரியா கூறியுள்ளது.

தொடர்ந்து 2-வது முறையாக ரஷ்யாவின் ஏ-50 போர் விமானம் தங்கள் எல்லைக்குள் பறந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தென்கொரியா கூறியுள்ளது. ஆனால் தென்கொரியாவின் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

Next Story