சூரியஒளி சக்தியில் இயங்கும் விமானம்


சூரியஒளி சக்தியில் இயங்கும் விமானம்
x
தினத்தந்தி 31 July 2019 10:20 AM GMT (Updated: 31 July 2019 10:20 AM GMT)

சூரியஒளி சக்தியில் இயங்கும் விமானம் தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது.

சீன தயாரிப்பில் உருவாகியுள்ள ஆளில்லா விமானம் ‘மோஸி 2’, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சூரியஒளி சக்தியில் இயங்கும் இந்த விமானத்தை ஒக்சாய் விமான நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த விமானம் தனது முதல் பயணத்தை சீனாவின் கிழக்கு மாகாணமான சேஜியாங்கில் உள்ள டெக்கிங் விமான நிலையத்தில் கடந்த 27ம் தேதி நிறைவு செய்தது.

இந்த விமானம், பகலில் சூரிய ஒளியில் 8 மணி நேரம் மின்சக்தியை சேமித்துக்கொண்டு, இரவு மிதமான வேகத்தில் 12 மணி நேரம் வரை வானில் பறக்கும் திறன் கொண்டது.

இந்த விமானம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மீட்டர் உயரம் வரை செல்லக்கூடியது. புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம், பேரிடர் மீட்பு, உளவு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானத்தின் பயன்பாடுகளை மேலும் அதிகரிக்க 5ஜி சேவை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story