“சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கலில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்” பிரதமர் மோடி அழைப்பு


“சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கலில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்” பிரதமர் மோடி அழைப்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 2:25 PM GMT (Updated: 25 Sep 2019 2:25 PM GMT)

சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கலில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள் என்று சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.

நியூயார்க்,

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- 

இந்தியாவில் கார்ப்பரேட் வரி ரத்து செய்யப்பட்டது வர்த்தகத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. மிகப்பெரிய உட்கட்டமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கலில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்.  வரவிருக்கும் ஆண்டுகளில், இந்தியாவின் நவீன உட்கட்டமைப்பிற்காக சுமார் 1.3 டிரில்லியன் டாலர்களை செலவிட உள்ளோம். 

இந்தியாவை முதலீட்டாளர்களுக்கு நம்பகத்தன்மையடையச் செய்து, இந்தியாவை தனித்துவமாக்கும் 4 காரணிகள், ஜனநாயகம், மக்கள்தொகை, தேவைகள் மற்றும் முடிவெடுத்தல் ஆகும். நிலக்கரி கிடைக்கும் 3-வது மிகப்பெரிய நாடு இந்தியா, நிலக்கரியை வாயுவாக மாற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் மாசு குறையும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story