இலங்கை விபத்தில் இறந்த 3 இந்தியர் அடையாளம் தெரிந்தது
![இலங்கை விபத்தில் இறந்த 3 இந்தியர் அடையாளம் தெரிந்தது இலங்கை விபத்தில் இறந்த 3 இந்தியர் அடையாளம் தெரிந்தது](https://img.dailythanthi.com/Articles/2019/Dec/201912260129329859_3-Indians-killed-in-Sri-Lanka-accident_SECVPF.gif)
இலங்கை விபத்தில் இறந்த 3 இந்தியர்களாக, இந்தி எழுத்தாளர் கங்காபிரசாத் விமல் மற்றும் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு,
இலங்கை கொழும்பு நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு வேன், கன்டெய்னர் லாரி மீது மோதியதில் 3 இந்தியர்கள் பலியானார்கள். முதலில் அவர்கள் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. போலீஸ் விசாரணையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியை சேர்ந்த 80 வயது இந்தி எழுத்தாளர் கங்காபிரசாத் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பேர் என தெரிந்தது. விமல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஆக்ரா கேந்திரியா இந்தி நிறுவனம் ஆகியவைகளில் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தார்.
இலங்கை கொழும்பு நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு வேன், கன்டெய்னர் லாரி மீது மோதியதில் 3 இந்தியர்கள் பலியானார்கள். முதலில் அவர்கள் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. போலீஸ் விசாரணையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியை சேர்ந்த 80 வயது இந்தி எழுத்தாளர் கங்காபிரசாத் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பேர் என தெரிந்தது. விமல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஆக்ரா கேந்திரியா இந்தி நிறுவனம் ஆகியவைகளில் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தார்.
Related Tags :
Next Story