ரஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு


ரஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 27 Dec 2019 10:07 PM GMT (Updated: 27 Dec 2019 10:07 PM GMT)

ரஷியாவில் பலானா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.


* கொலம்பியாவின் சாபர்ரால் மாகாணத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை, வெள்ளத்துக்கு இதுவரை 7பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

* ரஷியாவின் கோர்யாக் பிராந்தியத்தில் உள்ள பலானா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எகிப்து அதிபர் அப்தல் பட்டா எல் சிசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருதரப்பு உறவு மற்றும் லிபியா உள்நாட்டு போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

* மங்கோலியா நாட்டின் தலைநகர் உலன் பட்டோரில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 26 பேர் விஷச்சாராயம் குடித்து இறந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

* ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்கள் 336 பேரை கைது செய்திருப்பதாக ஹாங்காங் போலீசார் தெரிவித்துள்ளனர்.

* சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களை அந்த நாட்டு அரசுடன் இணைந்து ரஷியாவும், ஈரானும் கொன்று குவித்து வருகிறது என்றும் இந்த படுகொலையை தடுக்க துருக்கி கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Next Story