அமெரிக்காவில் இ-சிகரெட்டுக்கு தடை


அமெரிக்காவில் இ-சிகரெட்டுக்கு தடை
x
தினத்தந்தி 3 Jan 2020 11:15 PM GMT (Updated: 3 Jan 2020 7:25 PM GMT)

அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

வாஷிங்டன், 

இ-சிகரெட்டுகளால் உடலுக்கு கெடுதல் ஏற்படுவதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் இந்தியா, பிரேசில், தென்கொரியா உள்பட பல்வேறு நாடுகளில் இ-சிகரெட்டுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் அண்மை காலமாக இ-சிகரெட்டை புகைக்கும் நபர்களுக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இ-சிகரெட் தொடர்பான நோய் காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். 2,500-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இ-சிகரெட்டை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அதில் இருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க டாக்டர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. அதே சமயம் பச்சை கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story