கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு


கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு
x
தினத்தந்தி 17 March 2020 12:50 PM GMT (Updated: 17 March 2020 12:50 PM GMT)

ஹாலாந்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் சிலர் தாங்கள் கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

ஆம்ஸ்டர்டாம்,

ஹாலாந்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் சிலர் தாங்கள் கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இது பல்வேறு நாட்டினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலந்தில் இருக்கும் பல்கலைக் கழகத்தின் 10 ஆய்வாளர்கள் தாங்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குடும்பத்தில் 7 வகை வைரஸ் ஆகும். இந்த வைரஸ் ஏற்கனவே 6 வகை வைரஸ்கள் பரவி நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அவை பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாததால் வெளியில் தெரியவில்லை. தற்போது 7-வதாக பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் உலகை ஒட்டு மொத்தமாக ஆட்டி வைத்து வருகிறது.

முதல் 6-வது வகை கொரோனா வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்த ஹாலந்தை சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள், இதன் அடுத்த கட்ட ஆராய்ச்சியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்துள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவியதும் அவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த மருந்துகளின் அடிப்படையில் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பு மருந்தை எலிகளுக்கு செலுத்தி ஆய்வு செய்துள்ளனர். அதில் வெற்றி கிடைத்ததையடுத்து, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சோதனை சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் வெற்றி கிடைத்துவிட்டால் இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

Next Story