கொரோனா வைரஸ் தொற்று 20 அடி தூரம் வரை பரவும் -புதிய ஆய்வு


கொரோனா வைரஸ் தொற்று 20 அடி தூரம் வரை பரவும் -புதிய ஆய்வு
x
தினத்தந்தி 29 May 2020 9:41 AM GMT (Updated: 29 May 2020 9:41 AM GMT)

கொரோனா வைரஸ் 20 அடி தூரம் வரை பரவும் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கலிபோர்னியா

கொரோனா வைரஸ் 6 அடி தூரம் வரை தான் பரவும் என்று கூறப்பட்டதை பொய்யாக்கும் விதமாக கொரோனா தொற்று 20 அடி தூரம் வரை பரவும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இருமல், சளி, எச்சில் துப்புதல் போன்றவற்றால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுகிறது.

பேசுவதன் மூலமாகவும் தெறிக்கும் துளிகளில் கொரோனா பரவுகிறது. இதன் மூலம் தொற்று உடைய 40 ஆயிரம் துளிகள் வெளியேறுகின்றன. புவி ஈர்ப்பு சக்தியால் பெரும்பாலும் இவை நிலத்தில் உதிர்ந்து விடுகின்றன. எனினும் சில துளிகள் காற்றில் மிதந்தபடி பல மணி நேரம் நீடிக்கின்றன.இவற்றால் ஆறடி வரைதான் பாதிப்பு என கடந்த கால ஆய்வுகள் தெரிவித்த நிலையில் 20 அடி தூரம் வரை நோய் நுண்தொற்று பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

விஞ்ஞானிகள் நீர்த்துளிகளின் ஏரோடைனமிக்ஸ் மற்றும் சுற்றுச்சூழலுடன் அவற்றின் வெப்பம் மற்றும் வெகுஜன பரிமாற்ற செயல்முறை ஆகியவை வைரஸ் பரவலின் செயல்திறனை தீர்மானிக்கக்கூடும் என கூறி உள்ளனர

இருப்பினும் முகக்கவசம் அணிவதால் ஏரோசல் துகள்கள் வழியாக பரவுவதற்கான வாய்ப்பை திறம்பட குறைக்க முடியும் பெரிய துளிகளால் தொற்றுநோய்க்கான அபாயத்தை சமூக தூரத்தை கடைபிடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story