ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 19 Nov 2020 11:28 AM GMT (Updated: 19 Nov 2020 11:28 AM GMT)

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் இன்றைய நிலவரப்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. 

ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,15,608 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பாக இது அமைந்துள்ளது.

அதேசமயம் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,850ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25,573 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 6,438 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தொற்று பரவல் மிக தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story