ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் சாவு


ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் சாவு
x
தினத்தந்தி 18 March 2021 10:38 PM GMT (Updated: 18 March 2021 10:38 PM GMT)

ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 9 பேரும் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மாஸ்கோ,

ஆப்கானிஸ்தானில் சிறப்பு படையின் ஹெலிகாப்டர், மைதான் வார்டாக் மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.

அங்குள்ள பெஹ்சூத் மாவட்டத்தில் நடந்த இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

விபத்தின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.


Next Story