துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,404 பேருக்கு கொரோனா தொற்று
![கோப்புப்படம் கோப்புப்படம்](https://img.dailythanthi.com/Articles/2021/Mar/202103300726470953_In-the-last-24-hours-in-Turkey-32404-people-were-newly_SECVPF.gif)
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்காரா,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வந்தது.
இந்த நிலையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 32,404 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32,40,577 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 154 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 32,404 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 29,75,108 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 2,34,239 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 9-வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story