பிரேசிலில் புதிதாக 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Jan 2022 2:14 AM GMT (Updated: 29 Jan 2022 2:14 AM GMT)

பிரேசிலில் ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பிரேசிலியா,

பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு கொரோனா வைரசால்பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 47 லட்சமாக அதிகரித்துள்ளது. 

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 672 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.


Next Story