ஆப்கானிஸ்தான் எல்லையில் 2 பயங்கரவாதிகளை சுட்டுகொன்றது பாகிஸ்தான்


கோப்பு படம் (ANI)
x
கோப்பு படம் (ANI)
தினத்தந்தி 17 May 2022 9:13 AM GMT (Updated: 17 May 2022 9:33 AM GMT)

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள பழங்குடியின பகுதியில் தெஹ்ரீக் இ தலீபான் இயக்க பயங்கரவாதிகள் இருவரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்றது.

பெஷவார், 

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள பழங்குடியின பகுதி பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தலீபான்கள் ஆட்சி நடத்தி வரும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள போயா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கமான தெஹ்ரீக் இ தலீபான் (டிடிபி) இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி மருந்துகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story