பிரேசிலில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு


பிரேசிலில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு
x

போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பிரேசிலியா,

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏராளமான தங்க சுரங்கங்கள் காணப்படுகின்றன. அளவுக்கு அதிகமான சுரங்கங்கள் இருப்பதால் யானோமாமி பகுதியில் அந்த நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அவசர நிலையை பிறப்பித்தார். அதுமுதல் அங்கு சட்ட விரோத சுரங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரேசிலின் ரோரைமா மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பின்னர் அங்கிருந்து பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.


Next Story