இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த சவுதி அனுமதி


இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த சவுதி அனுமதி
x

Image Courtesy: AFP

இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது.

ரியாத்,

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் முதல் நாடாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 6-ம் தேதி இஸ்ரேல் வந்தடைந்தார். இஸ்ரேலில் 3 நாள் பயணத்தை முடித்து பைடன் நேற்று சவுதி அரேபியா புறப்பட்டார்.

சவுதி அரேபியாவின் ஜீடா நகருக்கு பைடன் வந்தடைந்தார். அவருக்கு அரசுமுறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார். அதிபராக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், இஸ்ரேலின் விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் - சவுதி இடையேயான உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story