ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; 4 பேர் பலி


ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; 4 பேர் பலி
x

Image Courtesy: AFP

ரஷியா மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா 131-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் எல்லையில் உள்ள ரஷியாவின் பெல்கொரோட் நகர் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 21 அடுக்குமாடி குடியிருப்புகள், 40 வீடுகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் பெல்கொரோட் நகரில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.


Next Story