வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி முதலில் பந்து வீச்சு


வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்:  இந்திய அணி முதலில் பந்து வீச்சு
x
தினத்தந்தி 14 Nov 2019 3:52 AM GMT (Updated: 14 Nov 2019 3:52 AM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீசி வருகிறது.

இந்தூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்காளதேச கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.  
விராட் கோலி தலைமையிலான இந்தியா, டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அணியாக திகழ்கிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது. எனவே, இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று சாதனையை தொடரும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

Next Story