20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்


20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 25 Jan 2020 11:30 PM GMT (Updated: 25 Jan 2020 11:30 PM GMT)

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

லாகூர்,

பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 65 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களும், முகமது ஹபீஸ் 67 ரன்களும் விளாசி களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டி கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் லாகூரில் நாளை நடக்கிறது.


Next Story