பங்களாதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை - ரோகித் சர்மா


பங்களாதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை - ரோகித் சர்மா
x
தினத்தந்தி 16 May 2020 12:33 PM GMT (Updated: 16 May 2020 12:33 PM GMT)

பங்களாதேசத்தில் மட்டும் தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர்களை  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வானில் இருந்து குதித்த தேவர்களை போல பார்க்கிறார்கள். சிறுவர்கள் தங்கள் ஆதர்ஷ புருஷர்களாக அவர்களை பார்த்தவுடன் ஆராதிக்கிறார்கள். இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக அளவில் ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கும் கிடைக்காத பெருமை இது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள சில மைதானங்களில் உள்ளூர் அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்த தருணங்கள் எல்லாம் உண்டு.

இந்நிலையில், ரோகித் சர்மா. பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பாலுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் ரோகித் சர்மா கூறியதாவது:

இந்தியாவிலும் பங்களாதேசத்திலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் நாம் தவறு செய்யும்போது எல்லா முனைகளிலிருந்தும் கண்டிப்பார்கள். பங்களாதேசத்தில் விளையாடச் செல்லும்போது நம்பமுடியாத காட்சியாக இருக்கும்.

 ரசிகர்களின் ஆதரவின்றி இந்திய அணி எங்கும் விளையாடுவதில்லை. ஆனால் பங்களாதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போதுள்ள பங்களாதேஷ் அணி வீரர்களான நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக விளையாடுகிறீர்கள். 2019 உலகக் கோப்பையில் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என்றார்.

Next Story