தென்ஆப்பிரிக்க 'ஏ'அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய ஏ அணி 276 ரன்களில் ஆல் அவுட்
முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
ப்ளூம்போண்டைன் ,
இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.
இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி, முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்க ஏ அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்தார்.
இந்திய 'ஏ' சார்பில் நவ்தீப் சைனி, இஷான் போரெல் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இந்திய 'ஏ' சார்பில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 71 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டமான இன்று தென் ஆப்பிரிக்க ஏ அணி 21 ரன்கள்( முன்னிலை )பெற்று இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது .
Related Tags :
Next Story